ADDED : பிப் 19, 2010 04:39 PM

<P>* சர்வேஸ்வரனுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். ஆனால், மூடர்களோ ஞானத்தையும் போதனையையும் வெறுத்து ஒதுக்குவார்கள்.<BR>* கடவுள் தாம் நேசிக்கிறவனைத் தண்டிக்கிறார். தம் மகனாக ஏற்றுக்கொள்ளும் எவனையும் பிரம்பால் அடிக்கிறார்.<BR>* கீல் முனையில் கதவு ஆடுகிறது. சோம்பேறி படுக்கையில் ஆடிக் கொண்டிருக்கிறான்.<BR>* ஒவ்வொரு மனிதனும் தன் மோகங்களால் இழுக்கப்பட்டு மருளும்போதே சோதனைகளுக்கு ஆளாகிறான்.<BR>* சோம்பேறியே! எறும்பைக் கவனி. அதன் வழிமுறைகளைப் பின்பற்றி அறிவு பெறு. அதற்கு வழிகாட்டி இல்லை. தலைவனும் இல்லை. அதிகாரியும் இல்லை. கோடைகால ஆகாரத்திற்கு அறுவடை காலத்திலே தானியத்தைச் சேகரித்து வைக்கிறது.<BR>* ஆசைச் சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான். ஏனெனில் சோதனை முடிந்த பின் வாழ்க்கையின் கிரீடத்தைப் பெறுவான்.<BR>* எவனாவது முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லோருக்கும் கடைசியானவனாய், எவருக்கும் தொண்டனாய் இருப்பானாக.<BR><STRONG>- பைபிள் பொன்மொழிகள்.</STRONG></P>